News

எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 09-05-2018 அன்று சென்னைப் பல்கலை கழகத்தில் வெளியிடப்பட்டது.. .
panruti லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
panruti லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 ஜூலை, 2018

திருக்குறள் தாவரங்கள் நூலின் மதிப்புரை

தினமணி- திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூலின் மதிப்புரை



திருக்குறள்

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் மதிப்புரை

தினத்தந்தியில் எனது நூல் திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் மதிப்புரை


திருக்குறள்

வெள்ளி, 11 மே, 2018

திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் நூல் வெளியீட்டு விழா

thiruvalluvar




thiruvalluvar
09-05-2018 அன்று புதன் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ் இலக்கியத் துறை, 
மெரினா வளாகம் பவளவிழாக் கலையரங்கத்தில் 
இரா. பஞ்சவர்ணம் எழுதிய 
திருவள்ளுவரின் திருக்குறள் தாவரங்கள் 
வெளியிட்டு விழாவில் சென்னை வருமான வரித்துறை துணை ஆணையர் 
எஸ்.பி. சக்ரப்போர்த்தி IRS, 
நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம்
முன்னால் அரசு செயலாளர் கி. தனவேல் IAS பணி ஓய்வு, 
தமிழ் வளர்ச்சித் துறை, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் 
மாஃபா. க. பாண்டியராசன், 
சென்னைப் பல்கலைக் கழகப் பதிவாளர் பேராசிரியர் 
இராம சீனுவாசன், 
தமிழ் வளர்ச்சித் துறை மற்றும் உலக தமிழ் வளர்ச்சி நிறுவன இயக்குநர்   
முனைவர்.கோ. விசயராகவன், 
திருக்குறள் ஆய்வு மைய உதவி பேராசிரியர் முனைவர் 
வ. இரகுராமன், 
சென்னைப் பல்கலைக் கழக தமிழ் இலக்கியத் துறை தலைவர் பேராசிரியர்
ஒப்பிலா மதிவாணன்.



thiruvalluvar

thiruvalluvar

வெள்ளி, 19 ஜனவரி, 2018

பனை பாடும் பாடல் நூல் வெளியீட்டு விழா

பஞ்சவர்ணம்

பனை 
17-01-2018 கோவை பேரூர் ஆதினம்
கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற
பனை உலகப் பொருளாதார மாநாட்டில்
இரா. பஞ்சவர்ணம் எழுதிய பனை பாடும் பாடல் என்ற நூல் வெளியீடு
வனம் இந்திய அறக்கட்டளை பொருளாளர் - பி.எம்.ஆர். சுந்தரமூர்த்தி அவர்கள்
சேனாதிபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர்
கார்த்திகேயன் சிவசேனாதிபதி அவர்கள்
தேசிய கயிறு வாரிய தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் அவர்கள்
தவத்திரு சாந்தலிங்க அடிகளார், கலை அறிவியல் தமிழ்கல்லூரி முதல்வர்
முனைவர் மருதாசல அடிகளார் அவர்கள்
சுதேசிய இயக்க தலைவர் அறிவுடை நம்பி அவர்கள்
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கப் பேரவை செயலாளர்
என்..கோன் அவர்கள், இவர்களுடன் நூலாசிரியர் இரா. பஞ்சவர்ணம்

வியாழன், 11 ஜனவரி, 2018

பனை பாடும் பாடல் நூல்வெளியீடு

பனைப்பொருளாதார மாநாட்டில்  
பனை பாடும் பாடல்


எனது நூல் "பனை பாடும் பாடல்" 17-01-2018 அன்று பேரூர் - கோவையில் நடைபெறும் உலக பனைப்பொருளாதார மாநாட்டில் வெளியீப்படவுள்ளது.

வெள்ளி, 17 மார்ச், 2017

தினமலரில் பனைமரம் நூல் மதிப்புரை

'பனைமரம்நூலின் திப்புரை 05-03-2017 அன்று தினமலர் நாளிதழ் சென்னைப் பதிப்பில் வெளியிடப்பட்டதுசிறப்பாக வெளியிடப்பட்ட தினமலர் நாளிதழிற்கும்மதிப்புரை எழுதிய பன்னிரு கைவடிவேலன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


பனைமரம்

புதன், 11 ஜனவரி, 2017

பனைமரம் நூல் வெளியீட்டு விழா





பனைமரம்
பனைமரம் - panai maram
மொழி - தமிழ்
ISBN NUMBER - 9788192377193
மொத்த பக்கம் - 756
விலை - ரூ. 800
வெளியீட்டு தேதி - 21-12-16
எடை - 900 கிராம்
நூல் அளவு  அகலம் 14 செமீநீளம் 22 செமீமையம்: 3.5 செமீ

பனைமரம்

நூல் வெளியீடு
இலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் அவர்கள் வெளியிட
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் டாக்டர் பொற்கோ அவர்கள் பெற்றுக்கொண்டார்.

உடன் - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர்,
பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன்,
சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாக இயக்குநர்,
 பேராசிரியர் டாக்டர் அ. பாலு,
சென்னைத் தொலைக்காட்சி இயக்குநர்,
முனைவர் பால. இரமணி இ.ஒ.ப,
கவிஞரேறு தமிழ்த்திரு கி. தனவேல் இ.ஆ.ப,
நூல் ஆசிரியர் டாக்டர் இரா.பஞ்சவர்ணம் மற்றும்
சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன்.

ஒப்பிலா மதிவாணன்
பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் நோக்க உரை

பொற்கோ
பேராசிரியர் டாக்டர் பொற்கோ தலைமை உரை


கி. தனவேல் இ.ஆ.ப
கவிஞரேறு தமித்திரு கி. தனவேல் இ.ஆ.ப நூல் அறிமுக உரை

குமரி அனந்தன்
இலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் நூல் வெளியீட்டு உரை

பால. இரமணி
சென்னை தொலைக்காட்சி இயக்குநர், முனைவர் பால. இரமணி சிறப்புரை


ஸ்ரீ. பாஸ்கரன்
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன் சிறப்புரை

அ. பாலு
மெரின வளாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர் அ. பாலு சிறப்புரை

பஞ்சவர்ணம்
நூல் ஆசிரியர் டாக்டர் இரா. பஞ்சவர்ணம் எற்புரை


இந்நூல் - ஓர் அறிமுகம்
நூல்
தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்’ என்னும் தலைப்பில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நூல்’ என்னும் திட்டத்தின் அடிப்படையில்இதுகாறும் அரசமரம்ஜ’, ‘சிறுதானியத் தாவரங்கள்’ ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளனஅந்த வரிசையில்  ‘தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம் – பனைமரம்’ என்ற இந்நூல் இப்போது வெளியிடப்படுகிறது.

களஞ்சியம்
பனைமரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும்  உள்ளடக்கிய முழுமையான களஞ்சியமாக இந்நூல் திகழும்.
பெயர்கள்
இந்நூலின்கண் பனைமரத்தின் வகைப்பாட்டியல்தாவர விளக்கம்இதர வகைப்பாடு,ஆங்கிலப்பெயர்கள்தமிழ்ப்பெயர்கள்தாவரவியற் பெயர்கள்வழக்கத்திலுள்ள ஏனைய தமிழ்ப்பெயர்கள்பிறமொழிப்பெயர்கள்இலக்கியங்களில் உள்ள தாவரத்தின் சிறப்புப் பெயர்கள்,நிகண்டுகள்சித்தமருத்துவத் தொகைப் பெயர்கள்மருத்துவப் பயன்பாடுகள்போன்றவை கவனத்துடன் தொகுக்கப்பட்டுநிரல்படத் தரப்பட்டுள்ளன.
பனைமரப் பாகங்களின் பயன்பாடுகள்
பனை ஓலைமடல்மட்டைநார் (சோற்றுப்பகுதி நீக்கியது), பாளைபூந்துணர்ச்சாறுகள்,காடிபதநீர்பனங்காய்நுங்குஇதக்கை (முதிர்ந்த நுங்கு), பனம்பழம்பனங்கொட்டை,பனங்கிழங்குபன்னாடைபனையின் தண்டுப்பகுதி (வைரம்), மரத்தின் பயன்பாடுமரச்சோறு,பனையின் வேர்ப்பகுதிபனைநீர்கொட்டுப்பனை (காய்ந்த பனை மரம்), பனை புல்லுருவி.பனையில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றம் வேதிப்பொருட்கள்பனங்கள் எடுக்கப் பயன்படுத்திய சிறப்புக் கருவிகள் - போன்ற விவரங்கள் அனைத்தும்  தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மேற்கோள்
தொல்காப்பியம்சங்க இலக்கியம்பதினெண்கீழ்க்கணக்குஐம்பெருங்காப்பியங்கள்,ஐஞ்சிறுங்காப்பியங்கள்பக்தி இலக்கியங்கள்புராணங்கள்வேதங்கள் - போன்றவற்றில் பனைமரம் இடம்பெற்றுள்ள இடங்கள் பாடலடிகள் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
வாய்மொழி இலக்கியங்களான பழமொழிகள்விடுகதைகள்நாட்டுப்புறப் பாடல் (தாலாட்டு,காதல்தொழில்ஒப்பாரி - போன்றவை), சித்த மருத்துவப் பாடல்மருத்துவப் பாடல்கள்.
ஈழச்செய்திகள்
ஈழச் செய்திகளான புராணம்பழமொழிகள்நாடகப்பாடல்கள்தாலவிலாசம் தமிழ் ஆங்கில பாடல்கள் - போன்றவற்றில் பனைமரம் இடம்பெற்றுள்ள பகுதிகள் தொகுத்து இந்நூலில் தரப்பட்டுள்ளன.
ஆன்மீகம்
பனைமரத்தைக் தலமரமாகக் கொண்ட கோவில்கள்கடவுள் பெயரோடு பனைமரம் இணைந்துள்ள மூர்த்திகள்அக்கோயில்கள் அமைந்துள்ள இடங்கள்பனை மரத்தைத் தம்பெயரோடு இணைத்துக் கொண்ட தமிழக ஊர்கள் மற்றும் பிற மாநில ஊர்களின் பெயர்கள்பனையின் பெயரைப் பின்னொட்டாகப் பெற்ற பிற தாவரங்கள்முன்னொட்டாகப் பெற்ற மாந்தரின் பெயர்கள் -போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மருத்துவம்
பனையின் மருத்துவப் பயன்பாடுகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளனஅனுபானம்,பனையைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருந்து வகைகள்பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகளான நாட்டு வைத்தியம் - பாரம்பரிய வைத்தியம்சித்தாஆயுர்வேதம்ஹோமியோபதி,யுனாநிமருந்துவ உணவு - போன்ற மருத்துவ முறைகளில் பனைமரம் பெறும் இடம் விளக்கப்பட்டுள்ளது.
மனிதர்க்கான மருத்துவம் மட்டுமின்றிபறவை - விலங்கின மருத்துவத்திலும் பனையின் பங்கு என்ன என்பது இந்நூலில் பேசப்பட்டுள்ளது.
அகத்தியர் வைத்தியச் சதகம்தேரையர் மகா கரிசல்தேரையர் வைத்தியம் 1000,பிரம்மமுனி வைத்திய விளக்கம்குணப்பாடம்போகர் கருக்கிடை நிகண்டு 500, யூகிமுனி வைத்தியக் காவியம்பிரம்மமுனி மருத்துவ விளக்கம்அற்புதச் சிந்தாமணிஅகத்தியர் வைத்தியக் காவியம்அகத்தியர் வைத்தியச் சிந்தாமணிஅகத்தியர் ஆயுர்வேதம் 1200, அகத்தியர் ஆயுர்வேதம்1500, அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம்சித்தமருத்துவத் தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்,பதார்த்த குணம்வள்ளலார்விலங்கின வைத்தியம் - போன்ற மருத்துவ நூல்களில் பனை பெற்றுள்ள சிறப்பான இடங்கள் கண்டறியப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
உணவும் பிறவும்
நேரடி உணவாகும் பனையின் பாகங்கள் காட்டப்பட்டுள்ளனபனையிலிருந்து தயாரித்து உண்ணப்படும் உண்பொருள்களும் சுட்டப்பட்டுள்ளனமனிதர்களுக்கே மட்டுமல்லாமல்,விலங்கினம்கால்நடைபறவையினம்பூச்சி புழுவினத்திற்கெல்லாம் பனைபடுபொருள்கள் எவ்வாறு உணவாகின்றன என்னும் விவரங்களும் விளக்கப்பட்டுள்ளனதேவையான இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தில் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
பனைமரத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்பாடுகள் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கமாவும் தயாரிக்கப்பட்டு,  அட்டவணையாக இணைக்கப்பட்டுள்ளனதேவையான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
பனைமரத்தின் பாகங்கள் அனைத்தும் வழுவழு தாள்களில்கண்ணைக் கவரும் வண்ணங்களில்எளிதாகப் பாகங்களை அடையாளம் காணும் வகையில் அச்சிடப்பெற்று இணைக்கப்பட்டுள்ளனசங்க இலக்கிய ஒப்பீடுகளும் காட்டப்பட்டுள்ளன.
மொத்தத்தில்
தாவரப்பெயர்கள்மேற்கோள் இலக்கியங்கள்ஆன்மீக்க குறிப்புகள்மருத்துவப்பயன்கள்,உணவுப்பயன்பாடுகள்வாழ்க்கைப் பயன்பாடுகள் - எனப் பனைமரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தருகின்ற களஞ்சியமாக இந்நூல் விளங்கும் என உறுதியாக நம்பலாம்.

வியாழன், 1 டிசம்பர், 2016

பலா மரம் நூல் வெளியீடு


          பலா மரம்




பஞ்சவர்ணம்



31-07-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று கடாம்புலியூரில் நடைபெற்ற பலாப்பழ 
திருவிழமற்றும் மதிப்புக் கூட்டுப் பயிற்சி விழாவில் திரு இரா.பஞ்சவர்ணம் அவர்கள் எழுதிய தமிழ்நாட்டு தாவரக்களஞ்சியம் தொகுப்பில்10-ஆவது தாவரமாக
பலா மரம் என்னும் நூல் வெளியீடுதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர்
நடிகர் மற்றம் ஒளிப்பதிபாளர் திரு தங்கர்பட்சன் அவர்கள் வெளியிட
பேராசிரியர் மருதூர் அரங்கராசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்
உடன் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் 
திரு சபா. ராஜேந்திரன் B.Sc., B.E., சென்னை கிறித்துவக் கல்லூரி 
தாவரவியல் துறைத்தலைவர் முனைவர் து. நரசிம்மன் Ph.D.,
சென்னை கிறித்துவக் கல்லூரிதமிழ்த் துறைத்தலைவர் . பாலுச்சாமி Ph.D., 
புதுவை ஆரோவில் ஆரண்ய தே. சரவணன் அவர்கள்  



இந்த நூல் - ஓர் அறிமுகம்
தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம் என்னும் தலைப்பில் தமிழகத்திலுள்ள ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நூல் என்னும் திட்டத்தின் அடிப்படையில், இதுகாறும் அரசமரம்ஜு, ‘சிறுதானியத் தாவரங்கள் (8-தாவரங்கள்)’ ஆகிய இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில்  ‘தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியத்தில்  பலாமரம் என்ற இந்த நூல் உங்கள் கைகளில் இப்போது தவழ்கிறது. அடுத்த வெளியீடாகக் கரும்பு, பனை, வேம்பு வெளிவர உள்ளன.

உள்ளடக்கம்
களஞ்சியம்
Ø  பலாமரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும்  உள்ளடக்கிய முழுமையான களஞ்சியமாக இந்நூல் திகழும்.
பெயர்கள்
Ø  இந்நூலின்கண் பலாமரத்தின் வகைப்பாட்டியல், தாவர விளக்கம், இதர வகைப்பாடு, ஆங்கிலப்பெயர்கள், தமிழ்ப்பெயர்கள், தாவரவியற் பெயர்கள், வழக்கத்திலுள்ள ஏனைய தமிழ்ப்பெயர்கள், பிறமொழிப்பெயர்கள் (ஆங்கிலத்தில்), இலக்கியங்களில் உள்ள தாவரத்தின் சிறப்புப் பெயர்கள், நிகண்டுகள், சித்தமருத்துவத் தொகைப் பெயர்கள் - போன்றவை கவனத்துடன் தொகுக்கப்பட்டு, நிரல்படத் தரப்பட்டுள்ளன.
பலாமரப் பாகங்களின் பயன்பாடுகள்
Ø  பலா இலை, பலாப்பிஞ்சு, கொத்துக்காய், காய், பழம், பலாப்பால், கொட்டை, பிசின், மரத்தின் பயன்பாடு, பலாச்சுளையின் பயன்பாடு, பலாவின் வேர்ப்பகுதி, பலாவில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றும் வேதிப்பொருட்கள் - போன்ற விவரங்கள் அனைத்தும்  தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மேற்கோள்
Ø  சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், புராணங்கள் - போன்றவற்றில் பலாமரம் இடம்பெற்றுள்ள இடங்கள் பாடலடிகள் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
Ø  வாய்மொழி இலக்கியங்களான பழமொழிகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல் (தாலாட்டு, காதல், தொழில், ஒப்பாரி - போன்றவை), சித்த மருத்துவப் பாடல், மருத்துவப் பாடல்கள்.
Ø  Dictionary of the Economic Products of India, Wealth of India போன்ற ஆங்கில நூல்களில் ஆங்கிலத்தில் கூறப்பட்டுள்ள செய்திகளை அப்படியே ஆங்கிலத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆண்மீகம்
Ø  பலாமரத்தைக் தலமரமாகக் கொண்ட கோவில்கள், அக்கோயில்கள் அமைந்துள்ள இடங்கள், (அத்தலத்தின் இறைவன் பெயர், தலத்தின் சிறப்பு, அமைவிடத்தின் அஞ்சல் எண் உட்பட.) பலா மரத்தைத் தம்பெயரோடு இணைத்துக் கொண்ட தமிழக ஊர்கள் மற்றும் பிற மாநில ஊர்களின் பெயர்கள், பலாவின் பெயரைப் முன்னொட்டாகப் பெற்ற மாந்தரின் பெயர்கள் - போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மருத்துவ நூல்கள்
Ø  பலாவின் மருத்துவப் பயன்பாடுகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. பலாவைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருந்து வகைகள், பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகளான நாட்டு வைத்தியம் - பாரம்பரிய வைத்தியம், சித்தா - போன்ற மருத்துவ முறைகளில் பலாமரம் பெறும் இடம் விளக்கப்பட்டுள்ளது.
Ø  மாந்தர்க்கான மருத்துவம் மட்டுமின்றி, விலங்கின மருத்துவத்திலும் பலாவின் பங்கு என்ன என்பது இந்நூலில் பேசப்பட்டுள்ளது.
Ø  குணப்பாடம், போகர் கருக்கிடை நிகண்டு 500, அற்புதச் சிந்தாமணி, அகத்தியர் வைத்தியக் காவியம், பதார்த்த குணம், எளிய வைத்திய முறைகள், குணபாடம் - தாதுசீவ வகுப்பு, சர்பத் தயாரிப்பு, வள்ளலார் மருத்துவம், விலங்கின வைத்தியம் - போன்ற மருத்துவ நூல்களில் பலா பெற்றுள்ள சிறப்பான இடங்கள் கண்டறியப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
உணவும் பிறவும்
Ø  நேரடி உணவாகும் பலாவின் பாகங்கள் காட்டப்பட்டுள்ளன; பலாவிலிருந்து தயாரித்து உண்ணப்படும் உண்பொருட்களும் கூறப்பட்டுள்ளன; மனிதர்களுக்கே மட்டுமல்லாமல், விலங்கினம், கால்நடை போன்றவற்றிற்கு பலா பொருள்கள் எவ்வாறு உணவாகின்றன என்னும் விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தில் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
மொத்தத்தில்

Ø  தாவரப்பெயர்கள், மேற்கோள் இலக்கியங்கள், ஆன்மீக குறிப்புகள், மருத்துவப்பயன்கள், உணவுப்பயன்பாடுகள், வாழ்க்கைப் பயன்பாடுகள் - எனப் பலாமரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தருகின்ற களஞ்சியமாக இந்நூல் விளங்கும் என உறுதியாக நம்பலாம்.