![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilJhZoJCMXovCRFVRSwVRBmOMy0yvFY5qZCl3UBNdMnVTXcTF4RRVt5YiYqKU5xPASlGM_76YyBYWrd47PQahRuGRLNHRKpcahom5wwLD1TnKRbRDV4wWwckZz5xDTLc_0yDnsutlxKkw/s320/panai_cover.jpg) |
பனைமரம் |
பனைமரம் - panai maram
மொழி - தமிழ்
ISBN NUMBER - 9788192377193
மொத்த பக்கம் - 756
விலை - ரூ. 800
வெளியீட்டு தேதி - 21-12-16
எடை - 900 கிராம்
நூல் அளவு - அகலம் 14 செமீ; நீளம் 22 செமீ; மையம்: 3.5 செமீ
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgbrcBvMxTEZtKNDnUr8cF75BZswEIc-8t1nrYIuSAd4mPYemNKLirwKRNu5eAWP5MUnrJ4OvF1TVNSsAMLvICGh1Dn_c5DXpz0TF-Zk5JQKj1DqYBmSGm_gDJE9VjitGk1HbHUjfowFsQ/s320/SDI_6866.JPG) |
பனைமரம் |
நூல் வெளியீடு
இலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் அவர்கள் வெளியிட
சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்
பேராசிரியர் டாக்டர் பொற்கோ அவர்கள் பெற்றுக்கொண்டார்.
உடன் - சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கியத்துறைத் தலைவர்,
பேராசிரியர் முனைவர் ஒப்பிலா மதிவாணன்,
சென்னைப் பல்கலைக்கழக மெரினா வளாக இயக்குநர்,
பேராசிரியர் டாக்டர் அ. பாலு,
சென்னைத் தொலைக்காட்சி இயக்குநர்,
முனைவர் பால. இரமணி இ.ஒ.ப,
கவிஞரேறு தமிழ்த்திரு கி. தனவேல் இ.ஆ.ப,
நூல் ஆசிரியர் டாக்டர் இரா.பஞ்சவர்ணம் மற்றும்
சென்னைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட
ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEihra4YPvQ7fbeiT9ZsFku1gJtJx1ng_DOmG6NisX6-4cl4nn7LFVoY55SnR0t2XJxlCVmYbtSwiy1JSQUwGhZ4pe-Omr6RaULj_MijUwpWFZhg-uSv3WkeJ64MQJss1jQUiUCWq10BQkU/s320/SDI_6840.JPG) |
ஒப்பிலா மதிவாணன் |
பேராசிரியர் ஒப்பிலா மதிவாணன் நோக்க உரை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6ESORIfN73GAh_B5IA4UBqI3qg40WQgJVmrJa1PAEPiwV4itWPFsMLuWTcOxEbgOKA2m7WYX-LY5kNPBHLq-2AJzrFqHVaBSBCrAH7qR2k7oH6xsyP2q47KSamnwGJhSWakB6T7vSg2A/s320/SDI_6871.JPG) |
பொற்கோ |
பேராசிரியர் டாக்டர் பொற்கோ தலைமை உரை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiek-d6mg9asa34rxz004FbgZY_Gj3YAHel1k3SFedZiPKwPcrjiO3ThM36U7KCkPoIiMRqSXtAX05BlzFIClddD3CfloP8pMv6Ih-q57SnJPm_tdP89v47Z1sogocsLZdzXuFANee9ass/s320/SDI_6872.JPG) |
கி. தனவேல் இ.ஆ.ப |
கவிஞரேறு தமித்திரு கி. தனவேல் இ.ஆ.ப நூல் அறிமுக உரை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8SBene6qmdDfUfxNUtDAVpgiAN4eVResBzmR7RTGJ1NyViQp8CGfOMHkEwmUxP_S_Qb40t5vGLqA4eqrKdHCN4EkkmXMlVqF7r32Fw9imbibPGnnkbAQBnb4LV2UK98uYgCI3Q_w8vug/s320/SDI_6876.JPG) |
குமரி அனந்தன் |
இலக்கியச் செல்வர் தமிழ்த்திரு குமரி அனந்தன் நூல் வெளியீட்டு உரை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuUa12p2jfUvQsTf44Kg-VzxM47UJ4ZtocHEfjsiIKEATdgpsBC5UcusDqal2HJZ88kCz-xr-WNrhyBxSXgO_wbRbQuhv3LOCcYaDE3JQHmGY5NlR1nycKF4_tw21qYolP0BwkZ6SFYtk/s320/SDI_6878.JPG) |
பால. இரமணி |
சென்னை தொலைக்காட்சி இயக்குநர், முனைவர் பால. இரமணி சிறப்புரை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhXruT193Bioeq7_VPVWbospHq8zVYALBPzPZ8sEJv9lGxiOQ2km5lqmF9tL-YtbLlFpbWCKgxOZkpdd6SjLE8jAaD0C_axVykowqbMPzw_ts5zLJ8yG5wDgEYh94X43BVsUwtsBzj66UY/s320/SDI_6885.JPG) |
ஸ்ரீ. பாஸ்கரன் |
நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஸ்ரீ. பாஸ்கரன் சிறப்புரை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3baOOQwEoHXF-LHoegefkQRErYpwYXfylCTqzDnqammdtitAMVRryTYXyxAJkaVfEU9sC5F0ERc7lZy4BrupZwH1KDqlvnjG83d_Aq7WV-hABPAJKsr9U6eovWt32w4ysLBq6UU0c9nU/s320/SDI_6888.JPG) |
அ. பாலு |
மெரின வளாக இயக்குநர் பேராசிரியர் டாக்டர் அ. பாலு சிறப்புரை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhfCDNMKTatGZhTv3QjV9MAT0LBSe46F__N77PijE3SLEcgJlU_NIGWd7HpAUIS9A1s9XVOkWzvUqCwHcx6KflVBS_rvTrQg5cQQHqZ3lhXI7zciAcrvxk-VHsefnMe0cR11KhnB5TQ1zI/s320/SDI_6889.JPG) |
பஞ்சவர்ணம் |
நூல் ஆசிரியர் டாக்டர் இரா. பஞ்சவர்ணம் எற்புரை
இந்நூல் - ஓர் அறிமுகம்
நூல்
‘தமிழ் நாட்டுத் தாவரக் களஞ்சியம்’ என்னும் தலைப்பில் தமிழகத்திலுள்ள ‘ஒவ்வொரு தாவரத்திற்கும் ஒரு நூல்’ என்னும் திட்டத்தின் அடிப்படையில், இதுகாறும் ‘அரசமரம்ஜ’, ‘சிறுதானியத் தாவரங்கள்’ ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. அந்த வரிசையில் ‘தமிழ்நாட்டுத் தாவரக்களஞ்சியம் – பனைமரம்’ என்ற இந்நூல் இப்போது வெளியிடப்படுகிறது.
களஞ்சியம்
பனைமரம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய முழுமையான களஞ்சியமாக இந்நூல் திகழும்.
பெயர்கள்
இந்நூலின்கண் பனைமரத்தின் வகைப்பாட்டியல், தாவர விளக்கம், இதர வகைப்பாடு,ஆங்கிலப்பெயர்கள், தமிழ்ப்பெயர்கள், தாவரவியற் பெயர்கள், வழக்கத்திலுள்ள ஏனைய தமிழ்ப்பெயர்கள், பிறமொழிப்பெயர்கள், இலக்கியங்களில் உள்ள தாவரத்தின் சிறப்புப் பெயர்கள்,நிகண்டுகள், சித்தமருத்துவத் தொகைப் பெயர்கள், மருத்துவப் பயன்பாடுகள், போன்றவை கவனத்துடன் தொகுக்கப்பட்டு, நிரல்படத் தரப்பட்டுள்ளன.
பனைமரப் பாகங்களின் பயன்பாடுகள்
பனை ஓலை, மடல், மட்டை, நார் (சோற்றுப்பகுதி நீக்கியது), பாளை, பூந்துணர்ச்சாறு, கள்,காடி, பதநீர், பனங்காய், நுங்கு, இதக்கை (முதிர்ந்த நுங்கு), பனம்பழம், பனங்கொட்டை,பனங்கிழங்கு, பன்னாடை, பனையின் தண்டுப்பகுதி (வைரம்), மரத்தின் பயன்பாடு, மரச்சோறு,பனையின் வேர்ப்பகுதி, பனைநீர், கொட்டுப்பனை (காய்ந்த பனை மரம்), பனை புல்லுருவி.பனையில் அடங்கியுள்ள சத்துக்கள் மற்றம் வேதிப்பொருட்கள், பனங்கள் எடுக்கப் பயன்படுத்திய சிறப்புக் கருவிகள் - போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மேற்கோள்
தொல்காப்பியம், சங்க இலக்கியம், பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள்,ஐஞ்சிறுங்காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், புராணங்கள், வேதங்கள் - போன்றவற்றில் பனைமரம் இடம்பெற்றுள்ள இடங்கள் பாடலடிகள் இந்நூலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன.
வாய்மொழி இலக்கியங்களான பழமொழிகள், விடுகதைகள், நாட்டுப்புறப் பாடல் (தாலாட்டு,காதல், தொழில், ஒப்பாரி - போன்றவை), சித்த மருத்துவப் பாடல், மருத்துவப் பாடல்கள்.
ஈழச்செய்திகள்
ஈழச் செய்திகளான புராணம், பழமொழிகள், நாடகப்பாடல்கள், தாலவிலாசம் தமிழ் ஆங்கில பாடல்கள் - போன்றவற்றில் பனைமரம் இடம்பெற்றுள்ள பகுதிகள் தொகுத்து இந்நூலில் தரப்பட்டுள்ளன.
ஆன்மீகம்
பனைமரத்தைக் தலமரமாகக் கொண்ட கோவில்கள், கடவுள் பெயரோடு பனைமரம் இணைந்துள்ள மூர்த்திகள், அக்கோயில்கள் அமைந்துள்ள இடங்கள், பனை மரத்தைத் தம்பெயரோடு இணைத்துக் கொண்ட தமிழக ஊர்கள் மற்றும் பிற மாநில ஊர்களின் பெயர்கள், பனையின் பெயரைப் பின்னொட்டாகப் பெற்ற பிற தாவரங்கள், முன்னொட்டாகப் பெற்ற மாந்தரின் பெயர்கள் -போன்ற விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டு இந்நூலில் தரப்பட்டுள்ளன.
மருத்துவம்
பனையின் மருத்துவப் பயன்பாடுகள் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன. அனுபானம்,பனையைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருந்து வகைகள், பயன்படுத்தப்படும் மருத்துவ முறைகளான நாட்டு வைத்தியம் - பாரம்பரிய வைத்தியம், சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி,யுனாநி, மருந்துவ உணவு - போன்ற மருத்துவ முறைகளில் பனைமரம் பெறும் இடம் விளக்கப்பட்டுள்ளது.
மனிதர்க்கான மருத்துவம் மட்டுமின்றி, பறவை - விலங்கின மருத்துவத்திலும் பனையின் பங்கு என்ன என்பது இந்நூலில் பேசப்பட்டுள்ளது.
அகத்தியர் வைத்தியச் சதகம், தேரையர் மகா கரிசல், தேரையர் வைத்தியம் 1000,பிரம்மமுனி வைத்திய விளக்கம், குணப்பாடம், போகர் கருக்கிடை நிகண்டு 500, யூகிமுனி வைத்தியக் காவியம், பிரம்மமுனி மருத்துவ விளக்கம், அற்புதச் சிந்தாமணி, அகத்தியர் வைத்தியக் காவியம், அகத்தியர் வைத்தியச் சிந்தாமணி, அகத்தியர் ஆயுர்வேதம் 1200, அகத்தியர் ஆயுர்வேதம்1500, அகத்தியர் வைத்திய ரத்தினச் சுருக்கம், சித்தமருத்துவத் தமிழ்நாடு வளர்ச்சிக் கழகம்,பதார்த்த குணம், வள்ளலார், விலங்கின வைத்தியம் - போன்ற மருத்துவ நூல்களில் பனை பெற்றுள்ள சிறப்பான இடங்கள் கண்டறியப்பட்டு இந்நூலில் சேர்க்கப்பட்டுள்ளன.
உணவும் பிறவும்
நேரடி உணவாகும் பனையின் பாகங்கள் காட்டப்பட்டுள்ளன; பனையிலிருந்து தயாரித்து உண்ணப்படும் உண்பொருள்களும் சுட்டப்பட்டுள்ளன; மனிதர்களுக்கே மட்டுமல்லாமல்,விலங்கினம், கால்நடை, பறவையினம், பூச்சி புழுவினத்திற்கெல்லாம் பனைபடுபொருள்கள் எவ்வாறு உணவாகின்றன என்னும் விவரங்களும் விளக்கப்பட்டுள்ளன. தேவையான இடங்களிலெல்லாம் ஆங்கிலத்தில் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன.
பனைமரத்தின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயன்பாடுகள் விரிவாகவும் தெளிவாகவும் விளக்கமாவும் தயாரிக்கப்பட்டு, அட்டவணையாக இணைக்கப்பட்டுள்ளன. தேவையான விளக்கமும் தரப்பட்டுள்ளன.
பனைமரத்தின் பாகங்கள் அனைத்தும் வழுவழு தாள்களில், கண்ணைக் கவரும் வண்ணங்களில், எளிதாகப் பாகங்களை அடையாளம் காணும் வகையில் அச்சிடப்பெற்று இணைக்கப்பட்டுள்ளன; சங்க இலக்கிய ஒப்பீடுகளும் காட்டப்பட்டுள்ளன.
மொத்தத்தில்
தாவரப்பெயர்கள், மேற்கோள் இலக்கியங்கள், ஆன்மீக்க குறிப்புகள், மருத்துவப்பயன்கள்,உணவுப்பயன்பாடுகள், வாழ்க்கைப் பயன்பாடுகள் - எனப் பனைமரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கமாகவும் தருகின்ற களஞ்சியமாக இந்நூல் விளங்கும் என உறுதியாக நம்பலாம்.